தேர்வு: செய்தி
வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா என்றும் அழைக்கப்படும் பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா, 2026, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவையில் ஜென் Z வார்த்தைகளை பயன்படுத்திய ராகுல் காந்தி; மரபுக்கு எதிரானது என NDA MPகள் கண்டனம்
புதன்கிழமை அன்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உரையில் 'முட்டாள்கள்' மற்றும் 'அந்த்பக்தர்கள் ' என்ற வார்த்தைகளை பயன்படுத்தியதை அடுத்து அமளி ஏற்பட்டது.
தரவுத்தளம் எவ்வாறு பாதுகாக்கப்படும்? ஆன்லைன் நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்வி
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (இளங்கலை நீட் தேர்வு) கணினி அடிப்படையிலான ஆன்லைன் முறையில் நடத்துவது குறித்து, மத்திய அரசால் அமைக்கப்பட்ட நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்த பிறகே முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டத் திருத்த மசோதா 2026: முந்தைய சட்டத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறது?
இந்தியாவில் நீட், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட முக்கியப் போட்டித் தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, மத்திய அரசு 2024 ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்தில் மேலும் பல கடுமையான பிரிவுகளை சேர்த்து 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' என்ற புதிய மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.
'வெறும் போராட்டத்திற்காக தடியடி நடத்த முடியாது': மாணவர் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம்
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும், வெறும் போராட்டத்திற்காக தடியடி நடத்துவதை நியாயப்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திங்களன்று வலியுறுத்தியது.
NTA தேர்வு முறைகேடு சீர்திருத்தம்: நந்தன் நிலேகணி தலைமையில் உருவாகும் 6 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவில் இருப்பவர்கள் யார்?
தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் உயர்நிலைப் பணிக்குழு அமைக்கப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
நீட் முறைகேடு விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை! 47 அதிகாரிகளை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது என்டிஏ! குற்றவியல் நடவடிக்கைக்கும் திட்டம்
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகளும் போராட்டங்களும் நிலவி வருகின்றன.
வினாத்தாள் கசிவுகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
தேர்வுத் தாள் கசிவுகளுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வினாத்தாள் கசிவுக்கு கடுமையான தண்டனை: நள்ளிரவு வெளியான பிரதமர் மோடியின் வீடியோ செய்தி
டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அமைப்பின் தலைமையிலும் எதிர்க்கட்சிகள் சார்பிலும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
"யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க ஆசையா...?" மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு! முழு விவரம் இதோ
மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேதி மாற்றம்! அதிகாரப்பூர்வ புதிய தேதி மற்றும் பணியிடங்கள் எண்ணிக்கை - முழு விபரம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (குரூப்-1) முதல்நிலைத் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீட் யுஜி 2026 மறுதேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன; 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தகுதி
தேசிய தேர்வு முகமை (NTA), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை), நீட் யுஜி 2026-இன் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு 2026: ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம், தேர்வு தேதி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.
வசூல் ராஜா MBBS பாணியில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 24 பேர் கைது
நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான ஆர்வலர்கள் நீட் (NEET-UG) மறுதேர்வை எழுதினர். முன்னதாக, வினாத்தாள் கசிவு சர்ச்சையை தொடர்ந்து அசல் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த மறுதேர்வு பலத்த பாதுகாப்புகளுடன் நடத்தப்பட்டது.
நாளை நீட் மறுதேர்வு எழுதப் போறீங்களா? அட்மிட் கார்டுடன் இந்த ஒரு ஃபார்ம் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க! உடனே செக் பண்ணுங்க
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இளங்கலை நீட் மறுதேர்வு நாளை (ஜூன் 21) நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
நீட் மறுதேர்வு: இந்தியாவில் Telegram செயலிக்கு திடீர் தடை விதித்த மத்திய அரசு
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் (NEET UG 2026) மறுதேர்வுக்கு முன்னதாக, வினாத்தாள் கசிவு தொடர்பான போலி வதந்திகள் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
பயிற்சி மையம் செல்லாமல் 19 அரசு வேலை தேர்வுகளில் பாஸ்! சாதனை படைத்த 23 வயது சாமானிய பெண்
இந்தியாவில் அரசு வேலைக்கான போட்டி மிகவும் அதிகமாக இருக்கும் சூழலில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் 19 போட்டித் தேர்வுகளில் வென்று சாதனை படைத்துள்ளார்.
CBSE தலைவர் ராகுல் சிங் திடீர் இடமாற்றம்; டிஜிட்டல் விடைத்தாள் திருத்த முறைகேடு குறித்து மத்திய அரசு விசாரணை
சிபிஎஸ்இ நிர்வாகக் கட்டமைப்பில் மத்திய அரசு அதிரடியான அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
சியுஇடி-யுஜி தேர்வில் தொழில்நுட்பக் கோளாறு! தேர்வு நேரத்தை மாற்றி அமைத்து என்டிஏ உத்தரவு
நாடு முழுவதும் உள்ள மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான சிஇயுடி-யுஜி (CUET-UG) பொது நுழைவுத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை: மறுதேர்வு வினாத்தாள்களை விமானப்படை மூலம் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டம்
தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, ஜூன் 21 மறுதேர்வு வினாத்தாள்களை அதீத பாதுகாப்புடன் கொண்டு சேர்க்க இந்திய விமானப்படையைப் பயன்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் NTA: நீட்-யுஜி 2026 வினாத்தாள் கசிவு குறித்து விளக்கம்
நீட்-யுஜி 2026 தேர்வில் முழு அளவிலான வினாத்தாள் கசிவு ஏற்பட்டதை தேசிய தேர்வு முகமை (NTA) மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.31% பேர் தேர்ச்சி பெற்று சாதனை!
தமிழகத்தில் ஒட்டுமொத்த மாணவச் செல்வங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியாகின.
தமிழகத்தில் இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; பார்ப்பது எப்படி?
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் நீண்ட நாள் காத்திருப்பு இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
ரத்தான நீட் தேர்விற்கு புதிய தேதி அறிவிப்பு: ஜூன் 21-ல் மறுதேர்வு
மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET UG 2026) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கான மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
CBSE பிளஸ் 2 ரிசல்ட் எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
CBSE, 2026-ஆம் ஆண்டிற்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய ஓட்டுநர் பழகுநர் உரிமம் (LLR) தேர்வுக்கு எப்படித் தயாராவது?
இந்தியாவில் வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு, ஓட்டுநர் பழகுநர் உரிமம் (Learner's License) பெறுவது ஒரு முக்கியமான முதல் படியாகும்.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு கால அட்டவணை மே 15ல் தொடக்கம்; முழு அட்டவணை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2026 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு; டிஜிலாக்கர் மற்றும் UMANG செயலியில் பார்ப்பது எப்படி?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்வு 2026: 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் ரிக்ரோல் கியூஆர் கோடு சர்ச்சை; சிபிஎஸ்இ விளக்கம்
மார்ச் 9 ஆம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு சமூக வலைதளங்களில் ஒரு வினோதமான காரணத்திற்காகப் பேசப்பட்டு வருகிறது.
யுபிஎஸ்சி 2025 முடிவுகள் வெளியீடு; தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி தேசிய அளவில் இரண்டாம் இடம்! முழு விவரங்கள்
மத்திய பொதுப்பணி ஆணையம் (யுபிஎஸ்சி), 2025 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு! போர் பதற்றத்தால் மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முக்கிய மாற்றங்களை வாரியம் அறிவித்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்! வளைகுடா நாடுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி மார்ச் 2 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை மத்திய கல்வி வாரியம் ஒத்திவைத்துள்ளது.
குரூப் 2 தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! மெயின் தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5 வரை கடைசி வாய்ப்பு
தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (குரூப் 2 & 2A) தேர்வுகளை நடத்தி வருகிறது.
10 மணிக்கு மேல் அனுமதி இல்லை; பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்குகின்றன.
12ஆம் வகுப்பு மதிப்பீடுகளுக்கான புதிய On-Screen Marking முறையை CBSE அறிமுகப்படுத்தியுள்ளது
பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு போர்டு எக்ஸாம்களுக்கு On-Screen Marking (OSM) அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது.
குரூப் 2/2A தேர்வர்களுக்கு குட் நியூஸ்; மார்ச் 15 இல் மீண்டும் தேர்வு; டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிப்ரவரி 8 ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ (Group II & IIA) முதன்மைத் தேர்வுகள் (தாள்-I மற்றும் தாள்-II), வரும் மார்ச் 15, 2026 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இளங்கலை நீட் தேர்வு 2026: விண்ணப்பப் பதிவு தொடக்கம்; தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள்
தேசிய தேர்வு முகமை (என்டிஏ), 2026 ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வு விண்ணப்பப் பதிவைத் தொடங்கியுள்ளது.
ஹால் டிக்கெட் இருந்தும் இடமில்லை; குளறுபடியால் குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி; மறுதேர்வு எப்போது?
தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 8, 2026) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கலா? இனி கவலையே வேண்டாம்; விண்ணப்பதாரர்களுக்கு உதவ புதிய ஹெல்ப்லைன்
மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), 2026 ஆம் ஆண்டிற்கான குடிமைப்பணித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தனது உதவி மைய சேவைகளை விரிவாக்கம் செய்துள்ளது.
'மிஸ் பண்ணுனா அவ்வளவுதான்.. மறுவாய்ப்பு கிடையாது'; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு எப்போது?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரிசல்ட் முக்கியம் இல்ல, பேஸ்மென்ட் தான் முக்கியம்; மாணவர்களுடனான உரையாடலில் பிரதமர் மோடி பகிர்ந்த வெற்றி மந்திரம்
தேர்வு நேரங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுதோறும் நடத்தி வரும் பரிக்ஷா பே சர்ச்சா (Pariksha Pe Charcha) நிகழ்ச்சியின் 9 வது பதிப்பு இன்று (பிப்ரவரி 6) நடைபெற்றது.
வங்கி வேலைக்காக தயாராகி வருகிறீர்களா? 2026-27 காலண்டர் வெளியீடு; உடனே செக் பண்ணுங்க!
வங்கி பணிகளுக்கான வேலைவாய்ப்புத் தேர்வு நடத்தும் முக்கிய அமைப்பான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), 2026-2027 ஆம் ஆண்டிற்கான தற்காலிக தேர்வு காலண்டரை வெளியிட்டுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க களமிறங்கும் அதிநவீன ஃபேஷியல் ரெகக்னிஷன் தொழில்நுட்பம்
மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), தான் நடத்தும் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளைத் தடுக்கவும் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
மத்திய அரசு வேலைவாய்ப்பு: எஸ்எஸ்சி 2026-27 ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு; முழு விவரம் இதோ
மத்திய அரசுப் பணிகளுக்கான பணியாளர் தேர்வாணையம் (SSC), 2026-2027 ஆம் ஆண்டிற்கான தற்காலிக தேர்வு கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
'டிட்வா' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஜனவரி 20-ல் தொடக்கம்
கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான 'டிட்வா' (Ditwah) புயல் மற்றும் வட தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகள் (Semester Exams), வரும் ஜனவரி 20-ஆம் தேதி முதல் தொடங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே அலெர்ட்: செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு
தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 9, 2026 முதல் பிப்ரவரி 14, 2026 வரை நடைபெறவுள்ளன.
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் 5 ஆண்டுகளில் பெண்களின் தேர்ச்சி எண்ணிக்கை இரட்டிப்பானது; மக்களவையில் தகவல்
இந்தியாவின் மிகவும் கடினமான மற்றும் மதிப்புமிக்க தேர்வுகளில் ஒன்றான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் பெண்கள் மிக வேகமாக முன்னேறி வருகின்றனர்.
+2 மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க; ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வுத் தேதி வெளியீடு; முக்கிய விவரங்கள்
இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐஐடிகளில் சேருவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு (Joint Entrance Examination Advanced) 2026 தேர்வுத் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.